உயர்தர பரீட்சை இன்று முதல் ஆரம்பம்

AL 1
AL 1

கொரோனா வைரஸ் சுகாதார வழிமுறைகளுக்கு ஏற்ப கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை இன்று (12) ஆரம்பமாகவுள்ளது.

இன்று முதல் நவம்பர் மாதம் 6 ஆம் திகதி வரையில் 2648 பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சை இடம்பெறவுள்ளது.

இம்முறை பரீட்சைக்காக 362,824 மாணவர்கள்கள் தோற்றவுள்ளனர்.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ள மாணவர்கள் பரீட்சை எழுதுவதற்காக 12 மேலதிக மத்திய நிலையங்களின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.