மினுவாங்கொடையில் உள்ள ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள் 07 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த 07 பேரில் ஒருவரின் மனைவி இரத்மலானையில் உள்ள இலங்கை வங்கி கிளை ஒன்றில் பணிபுரிவதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து கொரோனா தொற்றுக்குள்ளானவரின் மனைவி பணியாற்றிய வங்கி கிளை மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.