அத்தியாவசிய உணவுகள் சிலவற்றுக்கான இறக்குமதித் தீர்வை வரி நீக்கம்!

PicsArt 10 13 08.34.21
PicsArt 10 13 08.34.21

தற்போதைய வாழ்க்கைச் செலவு மற்றும் கொரோனா வைரஸ்க்கு மத்தியிலான இக்கட்டான சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, அரசாங்கத்தினால் பருப்பு, டின் மீன், பெரிய வெங்காயம் மற்றும் சீனி ஆகிய அத்தியாவசிய உணவுகள் சிலவற்றுக்கான இறக்குமதித் தீர்வை வரி நீக்கப்பட்டுள்ளது.

இறக்குமதித் தீர்வை வரி நீக்கப்பட்டுள்ளதால் இன்று இரவு (13) முதல், டின் மீன் (பெரிய) 200 ரூபாய்க்கும் பெரிய வெங்காயம் ஒரு கிலோகிராம் 100 ரூபாய்க்கும் சீனி ஒரு கிலோகிராம் 85 ரூபாய்க்கும் கொள்வனவு செய்யக்கூடிய வாய்ப்பு உள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு குறிப்பிட்டுள்ளது.

மேற்படி அத்தியாவசிய உணவுப் பொருள்கள் அடங்கலாக, 500 ரூபாய்க்கும் அதிக தொகைக்கு, சதொச கூட்டுறவு விற்பனை நிலையத்தில் பொருள்களைக் கொள்வனவு செய்தால், ஒரு கிலோகிராம் பருப்பை, 150 ரூபாய்க்குக் கொள்வனவு செய்ய வழியமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தெங்கு அபிவிருத்திச் சபை, குருநாகல் பெருந்தோட்டயாக்கம், சிலாபம் பெருந்தோட்டயாக்கம் ஆகியவற்றால், கொழும்பு நகருக்கான ​தேங்காய் விநியோகத்தை அதிகரித்துள்ளன.

இதனால், சதொச விற்பனை நிலையங்களின் ஊடாக, ​நியாயமான விலையில் ​தேங்காயைக் கொள்வனவு செய்துகொள்ள முடியுமென, ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.