ஊடகவியலாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து வடக்கு, கிழக்கில் மாபெரும் ஆர்ப்பாட்டம்!

unnamed 3 4
unnamed 3 4

முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர்கள் இருவர் மீதான தாக்குதலை கண்டித்து வடக்கு கிழக்கு பகுதிகளில் இன்று(15) மாபெரும் ஆர்ப்பட்டங்கள் இடம்பெறவுள்ளன .

இன்று (15) வியாழக்கிழமை மதியம் 12 மணிக்கு மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு முன் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற உள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்,ஊடக அமையம், ஊடகத்துறை ஊழியர் தொழிற்சங்க சம்மேளனம் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தினை மேற்கொள்ளவுள்ளதுடன்

வடக்கில் வடக்கு மாவட்டங்களை சேர்ந்த ஊடகவியலாளர்கள் சங்கங்கள் மற்றும் யாழ் ஊடகமையம் ஆகியன இணைந்து முல்லைத்தீவு நகர் பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளனர்.