சிறைச்சாலைகளின் பாதுகாப்பு பணிகளுக்கு விசேட பாதுகாப்பு படையணி உருவாக்க திட்டம்

Sudarshani Fernandopulle Speech Prisons
Sudarshani Fernandopulle Speech Prisons

சிறைச்சாலைகளின் பாதுகாப்பு பணிகளுக்கு விசேட பாதுகாப்பு படையணி ஒன்றை சிறைச்சாலை கட்டமைப்பிற்குள் உள்வாங்குவது தொடர்பில் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது.

கடந்த தினம் அந்த அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில், இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே இந்த விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளார்.

சிறைக் கைதிகளை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் போது, சிறைச்சாலை அதிகாரிகளுக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல் மற்றும் வெளி நபர்களினால் கைதிகளுக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல் என்பனவற்றை கருத்திற்கொண்டு விசேட பாதுகாப்பை வழங்க கவனம் செலுத்தப்படுகிறது.

இதற்கமைய, ஆரம்பிக்கப்படவுள்ள புதிய படையணிக்காக விசேட இராணுவ பயிற்சியை வழங்குவது தொடர்பிலும் இந்தக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டதாகவும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.