திருகோணமலையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி அரச அதிகாரிகளை ஏற்றிவந்த பேருந்து மீது மட்டக்களப்பு சத்துரக்கொண்டான் பகுதியில் வைத்து இனந்தெரியாத நபர்களினால் கல்வீச்சு நடத்தப்பட்டுள்ளது.
திருகோணமலையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த குறித்த பேருந்தின் மீது நேற்று (14) இரவு இவ்வாறு கல்வீச்சு இடம்பெற்றது.
குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மட்டக்களப்பு காவல் துறையினர் மேற்ற்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.