மினுவாங்கொட தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

unnamed 1 9
unnamed 1 9

மினுவாங்கொட கொரோனா கொத்தணியில் மேலும் 49 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்த 13 பேருக்கும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணிய 36 பேருக்குமே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 219 ஆக அதிகரித்துள்ளது.

இதேநேரம், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 23 பேர் பூரணமாக குணமடைந்து இன்று வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

அதன்படி நாட்டில் கொரொனா வைரஸில் இருந்து இதுவரை 3 ஆயிரத்து 380 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, கொரோனா தொற்றுக்கு உள்ளான ஆயிரத்து 826 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

கொரோனா தொற்று சந்தேகத்தில் 322 பேர் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த வைரஸ் காரணமாக இலங்கையில் இதுவரையில் 13 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.