ஜனாதிபதி ஆணைக்குழுவில் வாக்குமூலம் அளித்த மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ஷ!

yoshitha rajapaksa 1
yoshitha rajapaksa 1

அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ஷ வாக்குமூலம் ஒன்றை அளித்துள்ளார்.

இவர் நேற்று சுமார் இரண்டு மணி நேரம் வாக்குமூலம் அளித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சி.என்.என் தொலைக்காட்சி அலைவரிசையை ஆரம்பிக்க அரசு சொத்துக்களை தவறாக பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு தாம் கைது செய்யப்பட்டு ஒன்றரை மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் தாம் அரசியல் ரீதியாக பழிவாங்கலுக்கு உட்பட்டதாக தெரிவித்துள்ளார்.