சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கான மகிழ்ச்சியான செய்தி வெளியானது !

625.320.560.350.160.300.053.800.868.160.90
625.320.560.350.160.300.053.800.868.160.90

நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில்தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் தங்கள் குடும்பத்தினருடன் தொலைபேசி ஊடாக உரையாட முடியும் என்று சிறைச்சாலைத்துறை தெரிவித்துள்ளது.

கைதிகளுக்கு உளவியல் ரீதியான தாக்கத்தை குறைப்பதற்காக இத்தகைய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சிறை ஆணையாளர் சந்தன ஏகநாயக்க தெரிவித்துள்ளார்.

இதற்கமைய கைதிகள் 3 நிமிட காலத்திற்குள் குடும்ப உறுப்பினர்களுடன் தகவல்களை பரிமாறிக்கொள்ள வாய்ப்பு கிடைக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் கட்டுப்பாட்டுக்குள் வரும் வரையும் இவ்வாறு சிறை கைதிகளுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என சந்தன ஏகநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.