யாழ்- கோப்பாய் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு

1
1

யாழ்ப்பாணம் கோப்பாய் காவல் துறை பிரிவிற்குற்பட்ட கோப்பாய் சந்தியில், டிப்பர் வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து சம்பவத்தில் 36 வயதுடைய கருனாரட்ணம் கருனானந்தன் எனும் குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார். விபத்து இடம்பெற்ற போது மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பஸ்தர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

எனினும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் குறித்த குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.தற்போது உயிரிழந்தவரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது .

அதே வேளை விபத்து சம்பவம் தொடர்பில் கோப்பாய்காவல் துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்து.