சமுதாயத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் கைதிகளை பூசா சிறைச்சாலைக்கு மாற்ற நடவடிக்கை

45 2
45 2

சமுதாயத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் கைதிகளை பிரித்தெடுத்து பூசா உயர் பாதுகாப்பு சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உப்புல்தெனிய தெரிவித்துள்ளார்.

பூசா சிறைச்சாலையை உயர் பாதுகாப்பு சிறைச்சாலையாக பிரகடனப்படுத்தும் நிகழ்வின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். சிறைச்சாலைகள் ஊடாக சமுதாயத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படாத வண்ணம் விஷேட கவனம் செலுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.