உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய நபர்கள் தொடர்பாக சட்டமா அதிபர் திணைக்களம் விடுத்த உத்தரவு !

531261
531261

நாட்டில் கடந்த ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 62 பேர் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

குறித்த சந்தேக நபர்களில் 8 பேர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றின் நீதிபதி ஏ.சி.றிஸ்வான் முன்னிலையில் இன்று (19) ஆஜர்படுத்தப்பட்டனர்.

கொரனா அச்சுறுத்தல் காரணமாக நாட்டின் வேறு பகுதிகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏனைய சந்தேக நபர்கள் நீதிமன்றுக்கு அழைத்துவரப்படாத நிலையில் மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்தவர்கள் மாத்திரமே நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

பொலிஸார் சார்பில் சிரேஷ்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகரவும் ஆஜராகியுள்ளார்.

இந்த நிலையிலேயே, குறித்த சந்தேக நபர்கள் தொடர்பான அறிக்கையினை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், இது தொடர்பான வழக்கு அடுத்த மாதம் இரண்டாம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.