மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இரத்தம் மாற்றி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த வந்தாறுமூலையினை சேர்ந்த 09 வயதான சிறுவன் தொடர்பான வழக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 08 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு வந்தாறுமூலையை சேர்ந்த விதுலக்சன் கடந்த 19.03.2019 அன்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்திருந்தார்.
இரத்தம் மாதிரியை மாற்றி வழங்கியதன் காரணமாகவே குறித்த இளைஞன் உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இது தொடர்பிலான வழக்கு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் நடைபெற்று வந்தது.
நேற்று (Nov.06) மட்டக்களப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஏ.சி.றிஸ்வான் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்கினை ஜனவரி மாதம் 08 ஆம் திகதி வரையில் ஒத்திவைப்பதாக நீதவான் அறிவித்தார்.