ஊரடங்குள்ள பிரதேசங்களில் கடைகள், மருந்தகங்கள், அங்காடிகள் இன்று திறப்பு!

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நடைமுறையிலுள்ள பிரதேசங்களில் அனைத்து அத்தியாவசிய உணவுப்பொருள் கடைகள், மருந்தகங்கள், அங்காடிகள் என்பன இன்று (20) காலை 8.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தகவலை கொரோனா பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு நிலையம் அறிவித்துள்ளது.