காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரம் டிசம்பர் 31 வரை செல்லுபடியாகும்!

கொரோனா தொற்று நிலைமை காரணமாக சாரதி அனுமதிப்பத்திரம் செல்லுபடியாகும் காலத்தை மூன்று மாதங்களால் நீடிக்குமாறு போக்குவரத்து அமைச்சர் காமினி லொக்குகே மோட்டார் போக்குவரத்து திணைக்களத்துக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இதற்கமைய விஷேட வர்த்தமானி ஒன்றை வெளியிடும்போது அனைத்து சாரதி அனுமதிப்பத்திரங்களும் செல்லுபடியாகும் காலத்தை இவ்வாண்டு டிசம்பர் 31 வரை நீடிக்குமாறு மோட்டார் போக்குவரத்து திணைக்களம் உத்தரவு விடுத்துள்ளது.