மனைவி மற்றும் பிள்ளைகளை கொலை செய்த நபருக்கு மரண தண்டனை

Death
Death

இரத்மலானை பகுதியில் 2012 ஆம் ஆண்டு தமது இரு குழந்தைகளுடன் மனைவியைக் கொலை செய்து எரித்த கணவனுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரணதண்டனை விதித்துள்ளது.

31 வயதான மனைவியையும் 3 வயதான குழந்தையையும் கழுத்தை நெரித்து கொலை செய்து எரித்தமை மற்றும் ஒரு வயதான ஆண் குழந்தை ஒன்றை எரித்துக் கொலை செய்தமை ஆகிய குற்றங்களுக்காக, குற்றவாளிக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விக்கும் களுஆரச்சி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.