ஜே.வி.பி கூட்டத்தில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட குற்றவாளிக்கு மரண தண்டனை

marana thandanai
marana thandanai

துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு இருவரை கொலை செய்த குற்றச்சாட்டில் ஜூலம்பிட்டிய அமரே என்றழைக்கப்படும் கீகன கமகே அமரசிறி என்பவருக்கு தங்காலை மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.எஸ்.எஸ்.சபுவித இன்று (Nov.07) மரண தண்டனை விதித்துள்ளார்.

2012 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15 ஆம் திகதி கட்டுவன பகுதியில் இடம்பெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் கூட்டத்தின் போது நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பெண் மற்றும் இளைஞர் ஆகியோர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.