மேல் மாகாண விசேட விசாரணை பிரிவின் மேலும் இரண்டு காவல் துறை அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்கள் கேகாலை மற்றும் களனி பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என கோட்டை காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். தொற்றாளராக நேற்றைய தினம் இனங்காணப்பட்ட காவல் துறை பரிசோதகருடன் நெருங்கிப் பழகிய இருவருக்கே இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கொழும்பு – கோட்டை காவல் நிலையத்தில் அமைந்துள்ள மேல் மாகாண விசேட விசாரணை பிரிவின் காவல் துறை பரிசோதகருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், அவருடன் நெருங்கிப் பழகிய 11 பேர் தனிமைப்படுத்தபட்டுள்ளனர்.
குறித்த கட்டிடத்தில் அமைந்துள்ள கோட்டை காவல் நிலைய அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்டதினால் சில மணித்தியாலங்களுக்கு கோட்டை காவல் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்ட நிலையில் கிருமித்தொற்று நீக்கப்பட்ட பின்னர் குறித்த காவல் நிலையம் நாளாந்த நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.