அலரி மாளிகையிலும் கொரோனா பரிசோதனை!

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தலையடுத்து, பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரி மாளிகையிலும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த பரிசோதனை தற்செயலாக மேற்கொள்ளப்பட்டதாக கொரோனா தொற்று தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் குறித்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு முன்னர் கடந்த ஏப்ரல் மாதத்தில் அலரி மாளிகையில் கடமையாற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் பீ.சீ.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டது.

அதன்படி அலரி மாளிகையில் பணியாற்றி வரும் சுமார் 240க்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.