தற்போது நாட்டில் கொரோனா நோய் பரம்பல் அதிகரித்து வரும் நிலையில் யாழ்ப்பாண மாநகர சபை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினரால் யாழ்ப்பாண நகர் பகுதியில் கொரோனா தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடு இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது
![20201022 153437](https://thamilkural.net/wp-content/uploads/2020/10/20201022_153437-1024x576.jpg)
குறித்த விழிப்புணர்வு செயற்பாட்டின் போது யாழ் மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் கலந்து கொண்டு பொது மக்களுக்கான விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர்அத்தோடு யாழ்ப்பாண நகரப் பகுதிக்குள் முக கவசம் அணியாது வருகை தந்தவர்கள் எச்சரிக்கை செய்யப்பட்டனர்
அத்தோடு யாழ்ப்பாண மாநகர சபையின் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் அனைத்து கடைகளிற்கும் சென்று சுகாதார நடைமுறை மற்றும் பொருட்கள் விற்பனை தொடர்பான சோதனை நடாத்தினர் அத்தோடு கொரோனா ஏற்படா வண்ணம் எவ்வாறு நம்மைப் பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடும் முன்னெடுக்கப்பட்டது
![20201022 153038](https://thamilkural.net/wp-content/uploads/2020/10/20201022_153038-1024x576.jpg)
![20201022 153014](https://thamilkural.net/wp-content/uploads/2020/10/20201022_153014-1024x576.jpg)