அரசமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றதையிட்டு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஆதரவாளர்கள் இன்றிரவு நாடெங்கிலும் வெடிகளைக் கொளுத்தி மகிழ்ச்சி ஆரவாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்தவகையில் மட்டக்களப்பு நகரில் பொதுஜன முன்னணியின் ஆதரவாளர்களினால் வெடிகள் கொளுத்தப்பட்டு மகிழ்ச்சி தெரிவிக்கப்பட்டது.
பொதுஜன முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ப.சந்திரகுமார் தலைமையில் இந்தக் கொண்டாட்டம் முன்னெடுக்கப்பட்டது.