அதி சொகுசு பேருந்தில் பயணித்த நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி!

202004101403213113 5 states worst hit by coronavirus in India A quick look at SECVPF 3
202004101403213113 5 states worst hit by coronavirus in India A quick look at SECVPF 3

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த மதுகம – கொழும்பு அதி சொகுசு பேருந்தில் கொரோனா தொற்றுறுதியானவருடன் தொடர்புடைய 34 பேருக்கு இதுவரை கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.
மதுகம பகுதியிலேயே அவர்களும் அடையாளங்காணப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.

அவர்களில் பெரும்பாலானோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஓவிட்டிகல, பதுகம மற்றும் நவஜனபதய பகுதிகளை சேர்ந்தவர்கள் என அந்த காரியாலயம் குறிப்பிட்டுள்ளது.

அதேநேரம் இரத்தினபுரி – முவகம பகுதியில் கொரோனா தொற்றுறுதியான ஒருவர் அடையாளங்காணப்பட்டதை அடுத்து அவருடன் தொடர்பினை பேணிய 35 பேர் தனிமைப்படுத்தலுக்காக அனுப்பப்பட்டுள்ளனர்.

பேலியகொடை மீன் விற்பனை சந்தைக்கு மீனை கொள்வனவு செய்வதற்காக சென்ற ஒருவருக்கே இவ்வாறு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது.