போர்க்குற்றச்சாட்டுகளில் இருந்து படையினரைக் காக்க நடவடிக்கை – அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவிப்பு !

625.500.560.350.160.300.053.800.900.160.90 8 3
625.500.560.350.160.300.053.800.900.160.90 8 3

நல்லாட்சியின்போது ஜெனிவாவில் இலங்கையின் இணை அனுசரணையுடன் கொண்டுவந்த தீர்மானத்தை நீக்கி, போர்க்குற்றச்சாட்டுகளில் இருந்து எமது இராணுவத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.”என வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

இந்த விடயம் குறித்து இலங்கை வரவிருக்கும் அமெரிக்க இராஜாங்க செயலாளரிடம் வலியுறுத்தவுள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தில்நேற்று இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவுக்கு அமெரிக்கா விதித்துள்ள பயணத்தடையை நீக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சஜித் பிரேமதாஸவினால் முன்வைக்கப்பட்ட வேண்டுகோளுக்குப் பதில் அளித்தபோதே வெளிவிவகார அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இராணுவத் தளபதிக்கு அமெரிக்கா விதித்துள்ள பயணத் தடையை நீக்க நாம் ஆரம்பத்திலேயே நடவடிக்கைகளை முன்னெடுக்க ஆரம்பித்துவிட்டோம். இது குறித்த அதிகார மட்டப் பேச்சுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அமெரிக்க இராஜாங்க செயலகத்துக்கும் இதனை நாம் அறிவித்துள்ளோம்.

எனினும், இவ்வாறான நிலைமை ஏற்பட கடந்த நல்லாட்சி அரசே காரணம். அவர்கள் ஜெனிவாவுக்குச் சென்று இலங்கைக்கு எதிரான தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கத் தீர்மானம் எடுத்ததன் விளைவாகவே இந்த நெருக்கடிகள் ஏற்பட்டன” – எனவும் அவர்மேலும் தெரிவித்துள்ளார் .