முல்லைத்தீவில் பெருமளவான சட்டவிரோத மரக்கடத்தல் முறியடிப்பு!

முல்லைத்தீவு மாங்குளம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக முதிரை மரக்குற்றிகள் கடத்திசெல்ல முற்றபட்ட டிப்பர் வாகனமும் அதன் சாரதியும் காவல்துறையால் நேற்று முந்தினம் (22) கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் பெருமளவான மரங்களும் மீட்கப்பட்டுள்ளது.

மாங்குளம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பாலைப்பாணி பகுதியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சட்டவிரோதமான முறையில் ஆறு இலட்சம் ரூபா பெறுமதியான 29 முதிரை மரக்குற்றிகள் டிப்பர் வாகனத்தில் ஏற்றி செல்ல முற்பட்டவேளை மாங்குளம் காவல்துறையினர் அவர்களைக் கைது செய்துள்ளார்கள்.

முதிரை மரக்கடத்தல் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட யாழ்பாணம் சாவகச்சேரியினை சேர்ந்த சந்தேக நபரினை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாங்குளம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.