மேலும் இரு பகுதிகளுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்!

1603361655 Cerfew new 2
1603361655 Cerfew new 2

நுகேகொடை காவற்துறை பிரிவுக்குட்பட்ட கொத்தட்டுவ, முல்லேரியா ஆகிய பிரதேசங்களுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மீண்டும் அறிவிக்கும் வரையில் , கொத்தட்டுவ மற்றும் முல்லேரியா ஆகிய காவற்துறை பிரிவுகளில் இன்று இரவு 7 மணி தொடக்கம் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என கொவிட் 19 வைரசு தொற்றுப் பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.