பாராளுமன்ற காவல்துறை புலனாய்வு பிரிவின் ஒரு காவல்துறை அதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த காவல்துறை அதிகாரி பெலியகொட மீன் சந்தைக்கு சென்றுள்ள நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து குறித்த காவல்துறை அதிகாரியுடன் நெருங்கிய தொடர்பை பேணிய 7 பேருக்கு பி.சி.ஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கொரோனாவால் பாதிக்கப்பட்ட குறித்த காவல்துறை அதிகாரி, பிரதான பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் வேலை செய்யவில்லை என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.