பாராளுமன்ற காவல்துறை புலனாய்வு பிரிவின் ஒரு காவல்துறை அதிகாரிக்கு கொரோனா!

202008291228343883 There is no current evidence of protection from second SECVPF
202008291228343883 There is no current evidence of protection from second SECVPF

பாராளுமன்ற காவல்துறை புலனாய்வு பிரிவின் ஒரு காவல்துறை அதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த காவல்துறை அதிகாரி பெலியகொட மீன் சந்தைக்கு சென்றுள்ள நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து குறித்த காவல்துறை அதிகாரியுடன் நெருங்கிய தொடர்பை பேணிய 7 பேருக்கு பி.சி.ஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொரோனாவால் பாதிக்கப்பட்ட குறித்த காவல்துறை அதிகாரி, பிரதான பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் வேலை செய்யவில்லை என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.