சம்மாந்துறை பிரதேசத்தில் “திரியபியச ” வேலைத்திட்டத்தின் கீழ் வீடுகள் கையளிப்பு!

IMG 20201025 WA0003
IMG 20201025 WA0003

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பிரதேசத்தில் சமூர்த்தி லொத்தர் நிதியத்தின் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் “திரியபியச”சமூர்த்தி விசேட வீடமைப்பு வேலைத்திட்டத்திற்கான மூன்று வீடுகளை பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று (24) சம்மாந்துறை பிரதேச செயலக சமுர்த்தி தலைமைபீட முகாமையாளர் யு.எல்.எம் சலீம் தலைமையில் இடம் பெற்றது..

IMG 20201025 WA0005
IMG 20201025 WA0005

இம் மூன்று வீடுகளும் சமூர்த்தி லொத்தர் நிதியுதவியின் கீழ் ஒரு வீட்டிற்கு தலா இரண்டு இலட்சம் ரூபா செலவில், பயனாளிகளின் பங்களிப்புடன் பூர்த்திசெய்யப்பட்டுள்ளது.

IMG 20201025 WA0006
IMG 20201025 WA0006

நிரந்தர வீடில்லாத, பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்கள், வறுமைக் கோட்டின் கீழ் உள்ள, சமூர்த்தி பெறும் ஏழைக் குடும்பங்களுக்கு அவர்களின் சொந்த இடங்களில் வீடமைத்து கொடுக்கும் அரசின் இவ் வேலைத்திட்டத்தின் கீழ் இவ் வீடுகள் குறித்த பயனாளியின் சொந்த இடத்தில் நிர்மாணிக்கப்பட்டு வழங்கிவைக்கப்பட்டது.

IMG 20201025 WA0001
IMG 20201025 WA0001

சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவில் உள்ள வளத்தாப்பிட்டி, மல்வத்தை, புளேக் ஜே மேற்கு ஆகிய பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட பயனாளிகளுக்கே இவ்வீடுகள் வழங்கிவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனீபா, அம்பாறை மாவட்ட சமூர்த்தி பணிப்பாளர் எம்.எஸ்.எம் சப்றாஸ், சம்மாந்துறை பிரதேச உதவி பிரதேச செயலாளர் எம்.எம் ஆசிக், சம்மாந்துறை பிரதேச செயலக் கணக்காளர் ஐ.எம் பாரிஸ், கிராமஉத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

IMG 20201025 WA0006 1
IMG 20201025 WA0006 1