மறு அறிவித்தல் வெளியாகும் வரை கொழும்பு கோட்டை, புறக்கோட்டை,பொறளை மற்றும் வெலிகடகாவல்துறை பகுதிகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இன்று மாலை 6 மணி முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கொழும்பு, தெமட்டகொட, மருதானை காவல் துறை பிரிவுகளில் நேற்று முன்தினம்(23) முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில்,
மறுஅறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது.
இதே சமயம் கொழும்பு மாவட்டத்தின் 14 காவல்துறை பிரிவுகளிலும், கம்பஹா மாவட்டத்திலும், குருநாகலில் 5 காவல்துறை பிரிவுகளிலும்,
களுத்துறையின் 3 காவல்துறை பிரிவுகளிலும் காவல்துறை ஊரடங்கு சட்டம் அமுல் படுத்த பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.