பேலியாகொடை பகுதியில் கொவிட்-19 தொற்றுறுதியான நிலையில் மன்னார் – புதுகுடியிருப்பு பகுதிக்கு தப்பி சென்றிருந்த ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவர் தற்போது கந்தக்காடு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி.வினோதன் தெரிவித்தார்.