மஹரகம நகரசபைக்குட்பட்ட பிரதேசத்தில் 15 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி!

images 8
images 8

மஹரகம நகரசபைக்குட்பட்ட பிரதேசத்தில் 15 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மஹரகம சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாகஹவத்த, பன்னிப்பிட்டிய, வீரமாவத்த, பதிரகொட, ஜனதா மாவத்த, நாவின்ன, எரவ்வல, எம்புல்தெனிய மற்றும் ஜயகத் வீதி ஆகிய பிரதேசதங்களைச் சேர்ந்த 15 பேருக்கே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த அனைவரும், பேலியாகொட மீன்சந்தை கொத்தணி மற்றும் துறைமுக கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.