ஊடரங்கு உத்தரவுகளை மீறிய 1,122 பேர் கைது

unnamed 21
unnamed 21

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேர காலப் பகுதிக்குள் 46 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் இந்தக் காலப் பகுதியில் 7 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாககாவற்துறை ஊடகப் பேச்சாளரும், பிரதிப்காவற்துறை மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இதுவரை 1,122 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், 163 வாகனங்களும் காவற்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.