தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேர காலப் பகுதிக்குள் 46 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் இந்தக் காலப் பகுதியில் 7 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாககாவற்துறை ஊடகப் பேச்சாளரும், பிரதிப்காவற்துறை மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இதுவரை 1,122 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், 163 வாகனங்களும் காவற்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.