ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பிரதேச மக்களுக்கான தகவல்!

WhatsApp Image 2020 10 27 at 09.05.52
WhatsApp Image 2020 10 27 at 09.05.52

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் விற்பனை நிலையங்கள் மற்றும் மருந்தகங்கள் வார நாட்களில் திங்கள் மற்றும் வியாழக்கிழமையும் கொழும்பு மற்றும் குருணாகலை மாவட்டங்களில் செவ்வாய் மற்றும் வௌ்ளிக் கிழமையும் திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

அதன்படி, குறித்த தினங்களில் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரையில் விற்பனை நிலையங்கள் மற்றும் மருந்தகங்கள் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.