அமெரிக்க வெளியுறவு செயலாளர் மைக் பொம்பியோ உள்ளிட்ட உயர்மட்ட தூதுக்குழுவினர் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
இவர்கள் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக நாட்டை வந்தடைந்துள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்கு சொந்தமான Boeing 757 ரக விசேட விமானத்தின் மூலம் நேற்று இரவு 7.35 க்கு குறித்த தூதுக்குழுவினர் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
அத்துடன், அவர்கள் இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அமெரிக்க வெளியுறவு செயலாளர் மைக் பொம்பியோவுடன் 36 பேர் அடங்கிய உயர்மட்ட தூதுக்குழுவினர் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
இந்த நிலையில், இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, இலங்கைக்கான அமெரிக்க தூதரக அதிகாரிகள் மற்றும் வெளியுறவு அமைச்சின் அதிகாரிகள் ஆகியோர் குறித்த உயர்மட்ட தூதுக்குழுவினரை வரவேற்க விமான நிலையத்துக்கு வருகை தந்திருந்தனர்.
அத்துடன், அமெரிக்க வெளியுறவு செயலாளர் மைக் பொம்பியோ உள்ளிட்ட உயர்மட்ட தூதுக்குழுவினர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் வெளியுறவு அமைச்சர் உள்ளிட்ட உயர்மட்ட தரப்பினரை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளனர்.
மேலும், குறித்த சந்திப்புகளின் பின்னர், இன்று நண்பகல் 12.30க்கு குறித்த தூதுக்குழுவினர் மாலைதீவு நோக்கி பயணிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.