விற்பனை செய்யாத மீன்களை அரசாங்கம் கொள்வனவு செய்ய தீர்மானம்!

கொரோனா தொற்று பரவல் காரணமாக மீன்களை விற்கமுடியாமல் மீனவர்கள் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள நிலையில் அவர்கள் களஞ்சியப்படுத்தி வைத்துள்ள அனைத்து மீன்களையும் அடுத்த நான்கு நாட்களுக்குள் கொள்வனவுசெய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

மினுவாங்கொடை கொரோனா கொத்தணியை அடுத்து பேலியகொட மத்திய மீன் சந்தையில் கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்களால் கொரோனா தோன்றியதனால் மீன் விற்பனை செய்வதில் சிக்கல் நிலை ஏற்பட்டது. அத்தோடு, மீன் பிடி துறைமுகங்களில் மீன்பிடி நடவடிக்கைகளைத் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு விலை கொடுத்து கொள்வனவு செய்யும் மீன்களை எதிர்காலத்தில் மீன் ரின் உற்பத்திக்குப் பயன் படுத்தப்படும் என்றும் மீன் ஏற்றுமதி ராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.