அமீர் அலிக்கு சவால் விடுக்கும் பிரசாந்தன்

prasanthan1
prasanthan1

தமிழ் மக்களின் வாக்குகளை பெறாது அமீர் அலி பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டு காட்டுமாறு தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் சவால் விடுத்துள்ளார்.

மட்டு.ஊடக அமையத்தில் நேற்று (Nov.08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்துள்ளார்.

முன்னாள் போராளிகளைப்பற்றி கதைப்பதற்கு பிரதியமைச்சர் அமீர் அலிக்கு எந்த தகுதியும் இல்லையெனவும் தமிழ் மக்களின் வாக்ககளை பெறாது பாராளுமன்ற உறுப்பினராகிக் காட்டுமாறு சவால் விடுத்துள்ளார்.

முஸ்லிம் பயங்கரவாத அமைப்பினால் கிழக்கு மாகாணம் அச்சுறுத்தலுக்குள்ளாகி வருவதாகவும் இதன்போது பிரசாந்தன் சுட்டிக்காட்டினார்.

கிழக்கு மாகாணத்தில் உள்ள ஒரு கட்சியின் தலைவரைப் பார்த்து நாட்டின் பிரதமர் அச்சம் கொள்வது தமக்கு பெருமையாக இருப்பதாகவும் பிரசாந்தன் தெரிவித்தார்.