வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு!

IMG 3865
IMG 3865

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் சர்வதேச நீதி கோரி வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

IMG 3863 1
IMG 3863 1

வவுனியா, பழைய பேரூந்து நிலையம் முன்பாக சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி இன்று காலை (30.10) குறித்த ஆர்ப்பாட்டம் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்டது.

IMG 3861
IMG 3861

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ‘ எங்கே எங்கே ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே, பாடசாலை சென்ற மாணவர்கள் எங்கே, வெள்ளைவானில் கடத்தப்பட்டவர்களுக்கு பதில் தா, வேண்டும் வேண்டும் சர்வதேச விசாரணை’ என எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பியிருந்தனர் சுமார் அரை மணிநேரம் போராட்டத்தில் ஈடுபட்ட தாய்மார் பின்னர் அங்கிருந்து சென்றிருந்தனர்.

IMG 3857
IMG 3857