போலியான செய்தி தொடர்பில் காவல்துறையில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்த முன்னாள் அமைச்சர்!

Radha 1
Radha 1

தனது மகனுக்கு திருமணம் நடைபெற்றதாக சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்ட போலியான செய்திகள் தொடர்பில் முன்னாள் அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் , காவல்துறை முறைப்பாடு செய்துள்ளார்.

மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை மீறி, கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில், அவரது மகனுக்கு திருமண வைபவம் நடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இச் செய்தியை சில இணையத்தளங்களும் பிரசுரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.