மட்டக்களப்பில் நேற்று இரவு (30) பெய்த கடும் மழையினால் ஆயித்தியமலை மகிழடித்தீவு பிரதான வீதி மழை வெள்ள நீரினால் உடைந்து அதனூடாக வெள்ள நீர் வழிந்தோடிவருகின்றது இதனால் அந்த வீதியினூடான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
வருடாந்த பருவபெயாச்சி மழை நேற்று வெள்ளிக்கிழமை மாலை கடும் இடிமின்னலுடன் கனமழை பெய்தது. இதனையடுத்து வெள்ளநீர் தாழ்நிலப்பகுதியை நோக்கி ஓடத் தொடங்கிய நிலையில் ஆயித்தியமலை மகிழடித்தீவு பிரதேசத்துக்கான பிரதான வீதி வெள்ள நீரினால் உடைந்துள்ளது.
இதனால் இந்த வீதியினூடாக போக்குவரத்து செய்ய முடியாத நிலையினால் போக்குவரத்து தண்டிக்கப்பட்டுள்ளது.