125 காவற்துறை அதிகாரிகளுக்கு கொரோனா!

POLICE
POLICE

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள காவற்துறை அதிகாரிகளின் எண்ணிக்கையானது நேற்று வரை 125 ஆக உயர்வடைந்துள்ளது.

தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களில் உள்ள காவற்துறை அதிகாரிகள் கொண்டே குழுவே இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக காவற்துறை ஊடகப் பேச்சாளரும், பிரதிக் காவற்துறை மா அதிபருமான அஜித் ரோஹன நேற்று மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது தெரிவித்தார்.

இவர்கள் நான்கு முதல் ஐந்து நாட்களுக்கு முன்னர் தனிமைப்படுத்தப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கொவிட்-19 தொற்றுக்குள்ளான அதிகாரிகளின் நெருங்கிய தொடர்புகளாக அடையாளம் காணப்பட்ட 400 அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், 2,000 அதிகாரிகளை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தலுக்குட்படுமாறும் முன்னர் ஆலோசனை வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.