சிகிரியா காலவரையறையின்றி மூடப்பட்டது

unnamed 1 1
unnamed 1 1

கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் காரணமாக சிகிரியா காலவரையறையின்றி மூடப்படுவதாக மத்திய கலாச்சார நிதியம் தெரிவித்துள்ளது.

சிகிரியா தொடர்பாக போலி செய்திகளை பரப்புவதை தவிர்க்குமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளதோடு, சிகிரியா அருங்காட்சியகத்திற்கு நுழைய அனுமதிக்கப்படாது என்றும் சிகிரியா திட்ட மேலாளர் துசிதா ஹேரத் தெரிவித்துள்ளார்.

மத்திய கலாசார நிலையத்துக்கு சொந்தமான சிகிரியா திட்ட அலுவலகத்தின் அன்றாட நடவடிக்கைகள் எவ்வாறாயினும் செயல்படும் என தெரிவித்துள்ளார்.

சிகிரியாவைப் பார்வையிட உல்லாசப் பிரயாணிகளின் வருகை குறைந்துள்ளதால் அதிக வனவிலங்குகள் நடமாடுவதாக அப்பகுதி குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.