தமிழரசு கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் கோத்தாபயவிற்கு ஆதரவு

murali
murali

தமிழரசு கட்சியின் வாகரை பிரதேச சபை உறுப்பினரும் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணியின் செயலாளருமான பாலசிங்கம் முரளிதரன் ஜனாதிபதி தேர்ததில் போட்டியிடும் பொதுஜன பெரமுனை கட்சி வேட்பாளர் கோத்தாய ராஜபக்‌ஷவிற்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் நேற்று (Nov.10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

வாகரை பிரதேசதத்தில் தமிழர்களுடைய காணிகள் அபகரிப்பு இன்றும் இடம்பெற்று வருகின்றது. காணிகள் பறிபோன பின்னர் உரிமையை பெற்று என்ன செய்ய முடியும்? இன்று கிழக்கைப் பொறுத்த வரையில் எமது தமிழ் சமூகம் வேலை வாய்ப்பின்மை, பொருளாதார பலமின்மை போன்ற பல இன்னல்களை அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

எனவே எங்களுடைய சமூகம் தலை நிமிர்ந்து வாழ வேண்டும் என்றால் இந்த ஜனாதிபதி தேர்தலில் நாங்கள் கோட்டாபய ராஜபக்‌ஷவிற்கு வாக்களிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.