தேசிய பட்டியல் மூலம் நாளை நாடாளுமன்றம் வருகிறார் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர்!

Basil
Basil

பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தரான பசில் ராஜபக்‌ஷ நாளைய தினம் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்கவிருப்பதாக கொழும்பு அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்க்கப்படுகின்றது.

20 ஆவது திருத்தம் நடைமுறைக்கு வந்திருக்கும் நிலைமையில் இரட்டைப் பிரஜாவுரிமையைக் கொண்டுள்ள பஸில் பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்பதற்கான வாய்ப்புக்கள் இருப்பதை கொழும்பிலுள்ள அரசியல் வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.

ஆளும் கட்சி உறுப்பினரான ஜயந்த கொட்டகொட தனது பதவியை இராஜினாமா செய்து பசில் ராஜபக்‌ஷ நாடாளுமன்றஉறுப்பினராகப் பதவியேற்பதற்கு வழிவகுப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அவ்வாறு பதவியேற்கும் பட்சத்தில் புதன்கிழமை பொருளாதார அபிவிருத்தி அமைச்சுப் பதவியும் அவருக்கு வழங்கப்படலாம் எனவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.