இலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் 2 மரணங்கள் பதிவு!

இலங்கையில் கொரோனா தொற்றினால் 22 ஆவது மற்றும் 23 ஆவது மரணம் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

கொட்டாஞ்சேனை பகுதியை சேர்ந்த 68 வயதான பெண் ஒருவரும், கிராண்ட்பாஸைச் சேர்ந்த 81 வயதுடைய ஒரு பெண்ணுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இவர்கள் இருவரும் கொரோனா தொற்று உறுதியாகி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்தவர்கள் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.