மேலும் 15 பேர் வீடு திரும்பியுள்ளனர்

Tamil News large 2588343 1
Tamil News large 2588343 1

கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்கான நாட்டில் முப்படையினரால் பராமரிக்கப்பட்டு வரும் 35 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 1,082 பேர் தனிமைப்படுத்தலில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

எனினும் இதில் 15 பேர் தனிமைப்படுத்தல்களை நிறைவு செய்து வீடு திரும்பியுள்ளனர்.

அந்தவகையில் இதுவரையில் தனிமைப்படுத்தல் நடை முறையை முழுமையாக நிறைவு செய்த 62,917 இதுவரையில் வீடு திரும்பியுள்ளனர்.

அத்தோடு இன்று காலை 29 பேர் கட்டார் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு திரும்பியுள்ளனர்.

மேலும் அபுதாபியில் இருந்து 11 பேரும் , தோஹாவில் இருந்து 18 பேரும் நாடு திரும்பியுள்ளதோடு , அவர்களை தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அவர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.