கொரோனா தொற்றிலிருந்து மேலும் 332 பேர் பூரண குணமடைவு!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து 332 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அந்தவகையில் தற்போது நாட்டில் கொரோனா வைரஸில் இருந்து பூரண குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியவர்களின் மொத்த எண்ணிக்கை 5,581 ஆக இதுவரையில் பதிவாகியுள்ளது.