கிளிநொச்சி மாவட்டத்தில் இன்று தொற்றாளர் ஒருவர் இனம் காணப்பட்டுள்ளதாக பிரதேச சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி, கண்டாவேளை பிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடைய நபரொருவருக்கே கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கொழும்பில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் பணிபுரிந்து வந்த இவர் கடந்த 28 ஆம் திகதி கிளிநொச்சியில் அமைந்துள்ள தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.
அதன்படி, அவர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில் நேற்றைய தினம் அவருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போதே அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.