திக்வெல்ல-பொல்கஹமுல்ல-தர்மா கடற்கரைக்கு நீராடச் சென்ற இரண்டு இளைஞர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சம்பவம் இன்று (03.11.2020) மாலை இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சம்பவத்தில் காணாமல் போன இரண்டு பேரில், ஒருவரின் சடலம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட நபர் திக்வெல்ல-பொல்கஹமுல்ல பகுதியில் வசித்து வந்த 29 வயதுடையவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், நீரில் மூழ்கி மாயமான மற்றைய நபர் அம்பகஸ்கொரடுவ-பொல்கஹமுல்ல பகுதியில் வசித்து வந்த 25 வயதுடைய நபர் என தெரிவிக்கப்படுவதோடு, குறித்த நபரின் சடலத்தை தேடும் பணியில் கடற்படையினரும் திக்வெல்ல காவல்துறையினரும் இணைந்து ஈடுபட்டு வருகின்றனர்.