மூன்று இராணுவ வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!

202004241656205226 Tamil News Coronavirus PCR test intensity 1000 people checkup daily in SECVPF
202004241656205226 Tamil News Coronavirus PCR test intensity 1000 people checkup daily in SECVPF

தனிமைப்படுத்தப்பட்டுள்ள மூன்று இராணுவ வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிச் செய்யப்பட்டுள்ளது.

இராணுவத்தின் மின் மற்றும் பொறியியல் பிரிவில் கடமையாற்றும் இராணுவ வீரர்களுக்கே இவ்வாறு தொற்று ஏற்பட்டுள்ளது.

பீ.சி.ஆர் பரிசோதனையில் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவர்கள் தலவாக்கலை, பத்தனை ஸ்ரீபாத கல்வியல் கல்லூரியில் தனிப்படுத்தலுக்கு உட்படுத்திருந்த போதே தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

இவர்கள் பேலியகொட மீன் சந்தை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்களாவர்.