மன்னாரில் முகக்கவசம் அணியாமல் பயணங்களை மேற்கொள்பவர்களுக்கு எதிராகவும், முகக்கவசம் இன்றி பொது இடங்களில் நடமாடுகின்றவர்களுக்கு எதிராகவும் மன்னார் காவல்துறையினர் இன்று (04) முதல் சட்ட நடவடிக்கை முன்னெடுத்து வருகின்றனர்.
மன்னார் மாவட்ட சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் பண்டுல வீரசிங்கவின் வழி நடத்தலில் மன்னார் தலைமையக காவல்துறை நிலைய பொறுப்பதிகாரி பி.பி. ஜெயதுங்க அவர்களின் தலைமையில் மன்னார் நகர பகுதியில் முகக்கவசம் அணியாமல் நடமாடுவோர் , பேரூந்துகளில் பயணங்களை மேற்கொள்பவர்கள் ஆகியோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
காவல்துறையினரால் ஏற்கனவே மக்களுக்கு பல தடவைகள் பொது அறிவித்தல் வழங்கப்பட்ட நிலையில் தற்போது குறித்த சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மன்னார் காவல்துறையினர் தெரிவித்தனர்.