நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலை இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இவ்வாறு மழை பெய்யும் சந்தர்ப்பத்தில் தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் காணப்படும் எனவும் இதனால் ஏற்படகூடிய விளைவுகளிலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் எனவும் அந்த திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை, மத்திய, வடமத்திய, ஊவா, வடமேல், சப்ரகமுவ மற்றும் தெற்கு ஆகிய மாகாணங்களில் ஆங்காங்கே 100 மில்லிமீற்றருக்கு அதிக மழைவீழ்ச்சி பதிவாகும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கிழக்கு மாகாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோர பிரதேசங்களில் இன்று காலையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.